Ticker

6/recent/ticker-posts

இஸ்ரேல் தாக்குதலுக்கு 53 ஆயிரம் கடந்த உயிர் பலி

 

காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை கடந்துள்ளது இது குறித்து காஸா சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் காஸா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 82 பேர் உயிரிழந்தனர். 152 பேர் காயமடைந்தனர் இதையடுத்து 2023 அக்டோபர் 7 முதல் அங்கு இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,010 ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 119,998 பேர் காயமடைந்துள்ளனா என்று அந்த அறிக்கையில் தெறிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஜனவரியில் அமலுக்கு வந்த காஸா போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றத்துக்குப் பிறகு போர் நிரந்தரமாக முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் ஆனால் அந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படாததால், இஸ்ரேல் ராணுவம் மார்ச் 18 முதல் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியது. அதற்குப் பிறகு மட்டும் காஸாவில் 2,876 பேர் உயிரிழந்தனர் சுமார் 8,000 பேர் காயமடைந்தனர் என அறிக்கையில் தெறிவிக்கபட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்