Ticker

6/recent/ticker-posts

அஜித்க்குமார் உயிர் பிரிந்தது எப்படி 6 காவல்துறை செய்த செயல் என்ன ? lock-up death

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் கொடுத்த புகாரின் பேரில் கோயிலில் தற்காலிக காவலராக பணியாற்றிய அஜித்க்குமார் என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து சென்ற திருபுவனம் காவல்துறையினர் அந்த இளைஞரை கடுமையாக அடித்தே கொன்றுள்ளனர். 

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளிகோயிலுக்கு நேற்று முன்தினம் சிவகாமி என்பவர் தனது மகளுடன் கோயிலுக்கு காரில் வந்துள்ளார். காரை கோயிலின் தற்காலிக பணியாளர் அஜித்க்குமார் அவர்களிடம் பார்க்கிங் செய்ய சொன்னதாகவும், அவர் தனக்கு கார் ஓட்டத் தெரியாததால் மற்றொரு நபர் உதவியுடன் காரை பார்க்கிங் செய்ததாகவும். கோயிலுக்குச் சென்று திரும்பிய சிவகாமியும் அவரது மகளும் திரும்புவும் காரை எடுத்த போது காரில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை காணவில்லை என்று அஜித் அவர்களிடம் கேட்டதாகவும் அதற்கு அஜித் தனக்கு எதுவும் தெரியாது என்று சொன்னவுடன் அவர்கள் திருபுவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் தெரிகிறது.


புகாரின் பேரில் காளிகோயிலின் தற்காலிக ஊழியர் அஜித் அவர்களை தனிப்படை காவலர்கள் விசாரணைக்கு அழைத்துச்சென்று காவல்நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். அதன் பிறகு, தங்களது வாகனத்தில் வைத்தே சுற்றியுள்ளனர். நகை மற்றும் பணத்தை தான் எடுக்கவில்லை என்று திட்டவட்டமாக கூறிய பிறகும் சரமாரியாக ஆறு காவலர்கள் அவரை தாக்கியுள்ளனர். பிறகு, காளிகோயிலுக்கு பின்புறம் ஆட்டோவில் அழைத்துச்சென்று அங்கேயும் சரமாரியாக தாக்கியுள்ளனர். ஆட்டோவிலேயே அஜித் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அஜித்தை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் . பிறகு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அஜித் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அஜித் அவர்களின் வீட்டிற்கு வந்து நகை இருக்கிறதா என்று சோதனை செய்து அவரது தம்பி நவீனையும் காவல்நிலையத்திற்கு சென்று அவரையும் அடித்துள்ளனர்.

                             

தற்போது அஜித் குடும்பத்தினரும், பொதுமக்களும் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் அஜித் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அஜித் மரணத்திற்கு காரணமாக இருந்த காவலர்கள் அனைவரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். அஜித் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து சம்பந்தப்பட்ட காவலர்களை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து 6 காவல்துறையினர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

                  

அஜித்க்குமார் உடல் கூர் ஆய்வில் மண்டையோடு முதல் கால் பாதம் வரை 18 இடங்களில் காயம் கழுத்தில் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தமே இறப்புக்கு காரணமா  இருக்கலாம் என‌ கேள்வியும் எழுந்துள்ளது.


கடந்த 4 ஆண்டுகளில்  மட்டும் 24 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்திருந்தது.

மதுரை உயர்நீதிமன்றம் அஜித்குமார் என்ன தீவிரவாதியா என கேள்வி உள்ளது.





கருத்துரையிடுக

0 கருத்துகள்